சனி, 21 பிப்ரவரி, 2009

Ninaivil Nindrathu...

கத்தியின் கேள்வி

மனிதா,
வெங்காயத்தை நறுக்குபவன் நான்….
வீணாக நீ ஏன்
கண்ணீர் சிந்துகிறாய்?

மேடை பேச்சு

பேசுகிறவர்கள் எல்லாருமே,
அறிந்தவர்கள் இல்லை…
அறிந்தவர்கள் எல்லாருமே,
பேசுவதும் இல்லை!

காதலனும் காதலியும்

நீ சூரியன்,
உன் பார்வையும் உண் சிரிப்பொலியும் என் மேல் படர்வதால்…
நான் பூமி,
உன்னையும் உன் நினைவுகளையும் சுற்றி கொண்டே இருப்பதால்…

உயிரை தருவேன்

உயிரை தருவேன் என்றேன்,
என் உயிரை நிஜத்தில் உனக்காக எடுப்பதற்காக…
மறுபடியும் உயிரை தருவேன் என்றேன்,
என் உயிரின் ஒரு பிரதியை நிஜத்தில் நீ சுமப்பதற்காக…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக