சனி, 22 அக்டோபர், 2011

Sleepless

இரவுகள் என்னை உறங்க வைத்தாலும்,
அவளின் குறும்புகள் என்னை உறங்க விடுவதில்லை... 

Comedy Poem

அருகம்புல் போல என் காதல் வளர்ந்து கொண்டிருக்கும் போது,
அவள் அப்பன் எருமை மாடு போல மேய்ந்து விட்டான்...

God

உலகில் எத்தனை
கடவுள்
இருந்தாலும் …!!!

உன்னை எனக்கு
“ராட்ஷசி” ஆகா
தந்த …

உன் “அன்னை”யும்
எனக்கு ஒரு
கடவுள் தான்…!!!

Happy Birthday


ஒளிக்கை நீட்டி வாழ்க்கை,
 காட்டிய வசந்த நாள்,
நீ பிறந்த நாள்...
மெய்யாக இந்நாள்,
உன் பிறந்த நாள் அல்ல,
இந்த பூமிக்கு ஒரு தேவதை,
வந்த இனிய நாள்...
ஆனால் எனக்கு மட்டும் ஏனடா... 
இன்னும் நீ குழந்தையாகவே தெரிகின்றாய்...
உனது ஜனனம், 
உன் பெற்றோருக்கு மகிழ்ச்சி பொங்கும் தருணம்,
மனதில் குதூகலம்...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 
எனது அன்புக்குரிய அழகான ராட்ஷசி...
மென்மேலும் இன்பம் பெருகட்டும்...
உனது சுட்டித்தனம் தொடரட்டும்...

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

Songs

உன்னை சந்திக்கும் முன்,
கானா, குத்து, Rap Songs எனது I-Pod’ல் ஒலிக்கும்,
என் சிந்தனைக்கு உற்சாகம் கொடுக்கும்...
உன்னை கண்ட பின்,
Love, Feeling Songs எனது Apple Laptop’ல் ஒலிக்கும்,
என் செவிகளுக்கு விருந்து கொடுக்கும்...
ஆனால் இப்போ
,
உந்தன் பிரிவுக்கு பின்,
Sentimental, Sad Songs எனது I-Phone'ல் ஒலிக்கிறது,
மனதிற்கு ஆறுதல் கொடுக்கிறது...

Heaven

சொர்க்கம் என்னுமிடத்தில்,
நான் உன்னைச் சந்திக்காவிட்டால்...
அந்த இடம்,
சொர்க்கமாக இருக்க முடியாது...
நான் கண்ட,
அந்த சொர்க்கம்,
இந்த முகப்புத்தகம்... 

I Don't Know

கவிதை தெரியாது எனக்கு...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அழகிய மலையாள மகளே...
தமிழ் பேசி வாயடிக்கும் ஓவியமே...
உன்னை தவிர, 
வேறு கவிதை தெரியாது எனக்கு...

Good Night

அயல் நாட்டில் கொடி கட்டும்,
தமிழ் மறவாத மலேசியா பெண்ணே...
குமரியாக இருந்தும் குழந்தை,
குணம் கொண்ட முட்டை கண்ணே...
குரல் கேளாமல் பேசிய நங்கையே,
இணையம் வழியாக தெரிந்த மங்கையே,

இனிய இரவு வணக்கம்... 
நாளைய பொழுது இனிதே கழியட்டும்...

Expectations

உண்மையான காதலில் எதிர்ப்பார்ப்புகள் கிடையாது...
நான் அவளை காதலிப்பேன் என்று நான் எதிர்ப்பார்க்கவும் இல்லை...
அவள் என்னை மட்டும்தான் காதலிக்க வேண்டும் என்று கூட நான் எதிர்ப்பார்க்கவில்லை...

Pleasure

உன்னிடம் தோற்று போவதும்
சுகம்தான்...
உன்னால் கடிந்து கொள்ளப்படுவதும்
சுகம்தான்...
உன் அறிவுரைகளை கேட்டுக்கொண்டிருப்பதும்
சுகம்தான்...
உனது கட்டளைகளை கடைப்பிடிப்பதும்
சுகம்தான்...
நீ என்னை கேலி செய்வதும் 
சுகம்தான்...
உனக்காக...
என் ஆசைகள் சிலவற்றை மறைப்பதும்
சுகம்தான்...
பிடிக்காது எனினும் நீ செய்துவிட்டதால்
சகித்திருப்பதும் சுகம்தான்...
தன்மானம் துறந்து தவறு என் பக்கம்
இல்லையென்றாலும் உன்னிடம்
மன்னிப்புக்கோருவதும் சுகம்தான்...
நீ எனக்கானவள்!
என்பது
உண்மையாய் இருக்கும் வரை...
மட்டுமல்ல..,
"பொய்யாக போனாலும்"