செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

The Song Which I Feels - Vizhi Moodi

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே..
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே!
அடி இது போல் மழை காலம் என் வாழ்வில் வருமா?
மழை கிளியே (x2)
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே (x2)
நான் என்னை கண்டேனே
செந்தேனே…

(விழி மூடி யோசித்தால்...)

கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும் துளியாய் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்துடுமே
தானாய் எந்தன் கால்கள் இரண்டும் உந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே
இந்த காதல் வந்து விட்டால், நம் தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலூடும் விளையாடி திரிந்துடுமே

(விழி மூடி யோசித்தால்…)
(மழை கிளியே ...x2)

ஆசை என்னும் தூண்டில் முல்தான் மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டி கொண்டபின் மறுபடி மாட்டிட மனம் துடிக்கும்
சுற்றும் பூமி என்னை விட்டு தனியாய் சுற்றி பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ புது மயக்கம்
இது மாய வலை அல்லவா.. புதுவான நிலை அல்லவா..
உடை மாறும்.. நடை மாறும்.. ஒரு பாரம் எனை பிடிக்கும்

(விழி மூடி யோசித்தால்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக